- ஆந்திரா
- பாஜக
- ஜெகன்
- ஷர்மிளா
- கடப்பா
- திருமலா
- ஆந்திரா காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஒய் எஸ் ஷர்மிளா
- ராஜசேகர்
- முதல் அமைச்சர்
திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காசிநாயன மண்டலத்தில் உள்ள அமகம்பள்ளியில் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா தனது பிரசார பயணத்தை நேற்று தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது, “எனது தந்தை ராஜசேகர் முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசின் உதவியுடன் பல திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு வந்தார். ஆனால் தற்போது ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியை கொன்றவர்களுக்கு அண்ணன் ஜெகன் எம்.பியாக போட்டியிட சீட் தந்துள்ளார்.
கொலைகாரர்கள் மக்களவைக்கு செல்லக்கூடாது என்பதற்காக கடப்பா எம்.பி.யாக நான் போட்டியிடுகிறேன். தர்மத்திற்காக ஒரு பக்கமும், பணம் கொடுத்து அதிகாரத்தை வாங்க நினைப்பவர் ஒரு பக்கம் உள்ளோம். யார் வெல்வது என்பதை கொலையாளிகளை பாதுகாக்க முதல்வர் பதவியை ஜெகன் மோகன் பயன்படுத்துகிறார். கொலை அரசியலுக்கு முடிவு கட்ட ஜெகன் மற்றும் அவினாஷ் இருவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்.
The post ஆந்திர மாநில நலன்களை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார்; கொலை அரசியலை ஒழிக்க ஜெகனை தோற்கடிக்க வேண்டும்: கடப்பா பிரசாரத்தில் ஷர்மிளா பேச்சு appeared first on Dinakaran.